Saturday, May 23, 2009

மனிதா மனிதா !!--கிறுக்கல்கள்


காலன் வரும் முன்பு உன் வாழ்க்கை சுவடுகளை பின்னோக்கி பாராயோ மனிதா ,
மூடா, காலம் மட்டும் அழியா உலகினில் உன் சிறிய பாத சுவடுகளை பதிக்க நினைத்தாயோ ?
பிறப்பிற்கும் இறப்புக்கும் இடையினில் வாழும் மணித்துளிகளை உணதக்கிச்செல்ல என்ன பேராசை ?
மாயனின் வலையில் நீ வீழ்வதற்குள் பிறரை வீழ்த்த ஏன் இந்த பசி ?

காலனுக்கு ஏது குலம் ? உன் காலம் முழுவதும் நீ மாயனின் அற்ப குலற்றில்மூழ்க ,அனைத்தையும் கடந்து நிற்பவனும் உன்னை கை விட அவன் பெயரில் நீவாழ்க்கை குலத்தை கடக்க நினைந்தாய் .

எதை நீ எடுத்து வந்தாய் நீ உன்னுடையது என்ற சொல்வதற்கு ? எதை நீ எடுதுசெல்வாய் -- உன் பெயரா, மதமா,மொழியா அல்லது குலமா ? மண்ணோடு மக்கிபோகும் உன் உடலுக்கு நீ வாழ்க்கையை வீண் செய்து விட்டாய் .

சிறியவர் பெரியவர் என்று கூறி உன் ஒற்றுமையை இழந்தாய்.உன் தாய் - அவளை அவமதித்து விட்டாய்.

வாழ்க மானுடம் ! வளர்க மூடனம்

No comments:

Post a Comment